சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து கடந்த மாதம் 10ம் தேதி அறிவித்தார்.இந்த ஆய்வுக் குழு, நீட் தேர்வு சமுதாயத்தின் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வு செய்து,ஒரு மாத காலத்தில் அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.