குமரி: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சாமி சிலைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றை மீட்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிலை கடத்தல் விவகாரத்தின் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு கடத்தப்பட்டிருக்கின்ற சிலைகளை கண்டறிந்து வருகிறோம். அவ்வாறு கடத்தப்பட்டு வெளிநாட்டில் இருக்கின்ற சிலைகளை அடையாளம் கண்டு மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற இருக்கிறது.