திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் பழனியில் பாலியல் கொடுமைக்கு ஆளானது குறித்து டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது பெண் தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவருடன் கடந்த 19-ம் தேதி பழனி சென்ற போது, 3 பேர் கடத்தி விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் என புகார் தெரிவித்தார். தேடி வந்த கணவரை அடித்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் கொடுமை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.