நெல்லை: நெல்லை ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 13.50 கோடி மதிப்பீட்டில் கல்வி கட்டிடம், மாணவ -மாணவிகளுக்கான கூடுதல் விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இந்த புதிய கல்லூரிகள் மூலம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுவர்.