சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்காலில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டிட வசதி, மருந்துகள், உபகரணங்களை வாங்கி கொள்வதற்கு 136 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 15வது நிதிக்குழு மூலமாக ரூ.4,729 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.