ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததையடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவை ஹரியானா மாநில பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ஜூலை 23ல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவு செய்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.