கோபி : கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் அருகே ஒரே பிரசவத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசுமாடு - பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தனது வீட்டில் 8 மாடுகள் வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இதில் ஒரு பசு மாடு சினையாக இருந்து வந்தது.