உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் பொது சந்தை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சாலவாக்கம் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, வாடாதவூர் மயானப்பாதை, சிறுபினாயூர் கிராமத்தில் சிறுபாலப்பணிகள் என அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாலவாக்கம் கிராம சேவை மைய வளாகத்தில் மரம் நட்டு வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.