டெல்லி : சிறை காவலில் உயிரிழந்த சமூக போராளி ஸ்டேன் ஸ்வாமியின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்கர் - பரிஷத் வழக்கில் சுதந்திரமிக்க சட்டத்துறை மூலமே மட்டுமே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சட்டப்படியான நடவடிக்கைகளை தொடர்ந்தே ஸ்டேன் சுவாமி தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்டேன் சுவாமி மீதான குற்றச்சாட்டுகளின் தன்மை காரணமாக தான் அவரது ஜாமீன் விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாக அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.