கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் சட்ட மேலவை உருவாக்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலின் போது, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேண்டு அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். தற்போது அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.