மியான்மர்: மியான்மர் நாட்டின் யாங்கூ நகரில் பொதுமக்கள் 25 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருக்கின்றனர். ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களை தடுத்து நிறுத்திய ராணுவம் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மியான்மரில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.