சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து பேசினார். அப்போது அவர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: காய்ந்து வரும் பயிரை காப்பாற்ற உரிய தண்ணீரை கண்காணிப்பு குழு பெற்று தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டும் வரைவு திட்டம் தயாரிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு ஆணையம் தடை விதிக்க வேண்டும். ஆணையத்தின் அனுமதி இல்லாமல் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் நீர் நிர்வாகங்களை மேற்கொள்ள ஆணையம் மூலம் தடை விதிக்க வேண்டும்.