முக்கிய செய்தி சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் ஒலிபெருக்கி மற்றும் டிரோன் மூலம் கண்காணிப்பு: தீவிர சோதனையில் போலீசார் Jul 04, 2021 மெரினா கடற்கரை சென்னை: மெரினா கடற்கரையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் நடையிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணியில் இருந்து மாலை 9 மணி வரையில் பொதுமக்கள் மெரினா கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 3 மணி நேரம் மட்டுமே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகு நடைபயிற்சியை முடித்துகொண்டு பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபயிற்சிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு கடற்கரை பகுதியில் ஒன்றாக அமர்ந்து பேசுவது தெரியவந்தது. அதே நேரத்தில் பலர் கடற்கரை மணல் பகுதிக்கு சென்று அமர்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதுபோன்று கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதன்படி இணை ஆணையர் ராஜேந்திரன், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் மேற்பார்வையில் அண்ணா சதுக்கம் போலீசார் மெரினாவில் டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள். நடைபயிற்சி செல்பவர்கள் மணல் பகுதிக்கு செல்வதை கண்டுபிடிக்க டிரோன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
2 மாதங்களுக்கும் மேலாக களைகட்டியது; இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது; வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு
புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு: 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க மருத்துவ கல்வித்துறை திட்டம்
மலைச்சரிவை தடுத்து மக்களை காக்கும் மண் ஆணி திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலையளவு புகழ் சேர்க்கும் மகத்தான திட்டம்: தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக 57 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம்