சென்னை: கொரோனாவின் எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்றினால் கொரோனாவின் எந்த அலையும் உள்ளே வரமுடியாது என கூறினார். கொரோனா பெருந் தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது எனவும் தெரிவித்தார். மருத்துவர்களின் அர்பப்பணிப்பு, மாநில மருத்துவ கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் காரணமாக தொற்று குறைந்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள்., பூங்காக்கள் திறக்கவில்லை என கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தின் மீதள்ள அக்கறை காரணமாக அலுவலங்கள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.