சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், ஏராளமான மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்ட போதும், தங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறார்கள்.