திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேயூர் அருகே ஆதரம்பாளையத்தில் 270 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவில் முன் இருந்த கல்தொட்டியை வரலாற்று ஆய்வாளர்கள் முடியரசு, சிவகுமார், பிரவீன் குமார் கண்டறிந்தனர். கல்தொட்டியில் சகாப்தம் 4,852 என எழுதப்பட்டுள்ளது கி.பி.1751ம் ஆண்டை குறிக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கல்வெட்டில், கல்தொட்டி அமைக்கப்பட்ட ஆண்டு, அமைத்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.