சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 வயது குழந்தை விழுங்கிய மோதிரம் உணவுக்குழாயில் சிக்கிய நிலையில் நவீன சிகிச்சை முறையில் மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்தனர்.சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:சிவகங்கை, மதுரை முக்கு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ராம்பிரசாத், நிரஞ்சனா தம்பதியின் குழந்தை மதிமாலா(2). கடந்த ஜூன் 28ம் தேதி நிரஞ்சனா அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் தவறி வீட்டுக்குள் விழுந்தது. இந்த மோதிரத்தை விழுங்கிய குழந்தை மதிமாலா, சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி எடுத்தது. இதையடுத்து குழந்தையை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.