நொய்டா: நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து மாடல் அழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோட்வாலி பகுதியில் உள்ள 14வது மாடியில் இருந்து குதித்து, மும்பையை சேர்ந்த மாடல் அழகி பாவனா கவுதம் (24) தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், பாவனா கவுதமின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் டிசிபி ஹரிஷ் சந்தர் கூறுகையில், ‘நொய்டாவின் பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள 14வது மாடியில் இருந்து குதித்து பாவனா கவுதம் தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில், மும்பையில் இருந்து தனது காதலனுடன் நொய்டா வந்த பாவனா, 4வது மாடியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்தார். இங்கு, அவரது காதலனுக்கு விருந்து வைத்தார். இதையறிந்த அவரது தாய், காதலனை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காக பாவனாவை திட்டியுள்ளார்.