திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக துணை தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த சொப்னா, பிஆர்ஓ சரித்குமார் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இந்த வழக்கை சுங்க இலாகா, என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. சொப்னா, சரித்குமாரிடம் நடந்த விசாரணையில், அமீரக தூதரகத்தின் துணை தூதர் ஜமால் உசேன் அல்சாபி, இன்னொரு உயர் அதிகாரி ராஷிக் காமிஸ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினர். இதற்கிடையே 2 பேரும் துபாய் சென்றுவிட்டனர். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை.