தர்ணாவில் ஈடுட்ட பெண் திடீர் மயக்கம்

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்பர்னஸ். இவரது மனைவி தீபாமேரி(35). கணவர் ஜான்பர்னஸ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தினசரி தன்னை அடித்து துன்புறுத்துவதாககடந்த 26ம் தேதி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் புகாரை பெற்ற ஆய்வாளர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தீபாமேரி நேற்று திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் திடீரென மயக்கமடைந்து கீழே சாய்ந்துள்ளார். பின்னர் உடன் இருந்தவர்கள் அவருக்கு முதல் உதவி செய்து, பிறகு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: