முக்கிய செய்தி தமிழகம் 100% கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி Jun 28, 2021 அமைச்சர் மகேஷ் பயய்யா திருச்சி: 100% கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். திருச்சி - அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். 4 நாட்களில் 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசின் விதிமுறைகளை மீறி 100% கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்றார். பள்ளிகளில் தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசுப் பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறார். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் துறையின் கீழ் வரும் அனைத்து பிரிவுகளின் இயக்குநர்களுடன் அவர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். ஒவ்வொரு பிரிவிலும் நிலுவையில் உள்ள திட்டங்கள், குறைபாடுகள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து நிபுணர்குழு அளித்த பரிந்துரைகளின்படியே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நேரடியாக எழுதியுள்ளனர். எனவே, அதை 50 சதவீத மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த முறையை அரசு தேர்வு செய்துள்ளது என கூறினார்.
என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு..!!
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பரப்புரை
தமிழ்நாட்டில் தடையின்றி மின்விநியோகம்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.. குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல : உச்சநீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000..விடியல் பேருந்து பயணம்; 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி புகழாரம்
யாரும் நகை கடை பக்கம் போயிடாதீங்க.! ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கு விற்பனை
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை உலகம் போற்றும்: திமுக புகழாரம்