பூவுலகின் நண்பர்கள் முதல்வருக்கு நன்றி

சென்னை: சுற்றுச் சூழலைக் காக்க அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்ததற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினை பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க. ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேற்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் அவ்வமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து, சுற்றுச் சூழலைக் காக்க போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று பேரவையில் அறிவித்ததற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: