இந்நிலையில் சென்னையை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்பவர் இந்திய மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து இவருக்கு பதிலளிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள காலாவதி சரண் மருத்துவமனை இந்தியில் பதில் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி கடித உறை மீதான விலாசத்தையே இந்தியில் தான் எழுதி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், ஆங்கிலத்தில் தகவல் கோருபவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என தகவல் ஆர்வலரான தயானந்த் கிருஷ்ணன் கூறியுள்ளார். இதேபோல் கடந்த வாரம் தென்காசியை சார்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பல்வேறு வடமாநில அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.