திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சிக்கு குவைத்தில் இருந்து நேற்று ஒரு விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலகாவினர் வழக்கமான பரிசோதனை செய்தனர். அப்போது மலப்புரத்தை சேர்ந்த ரஷீத், அப்துல்ரஹ்மான் ஆகியோர் மறைத்து வைத்திருந்த தங்க பிஸ்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல் ஷார்ஜாவில் இருந்து வந்த முஸ்டாக் மறைத்து வைத்திருந்த தங்கமும் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 3 பேரிடமும் இருந்து மொத்தம் 3.44 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.