முக்கிய செய்தி சென்னை உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது எப்படி?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!! Jun 25, 2021 கி.மு. டிப்லூ ஸ்டாலின் சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி அந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இதையடுத்து 25ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் அனைவரும் கலந்துக் கொண்டுள்ளனர். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வியூகம் எவ்வாறு வகுக்க வேண்டும். மக்களின் எண்ணங்களை எவ்வாறு பூர்த்தி செய்யக்கூடிய வகையில் திட்டங்களை தீட்டி அவர்களை கவர வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை போன்ற நகரங்களிலும் தேர்தலானது நடத்தப்படவில்லை. இந்த தேர்தலும் அறிவிக்கப்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். வெற்றி வீயூகங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் தற்போது நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரியவந்திருக்கிறது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்