சென்னை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல்..!! Jun 24, 2021 ஜி.ஐ வங்கி வடக்கு டிட்க் சென்னை: எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களை குறிவைத்து பல லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றது வடமாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் நூதன முறையில் அரங்கேறிய கொள்ளை வங்கி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாநிலம் முழுவதும் 21 இடங்களில் கொள்ளை நடந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவினர் அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்தனர். வடமாநிலத்திலும் இதேபாணியில் கொள்ளை நடந்திருப்பதால் அதில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அமீர் ஹர்ஸ் என்ற 37 வயது கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானாவை சேர்ந்த அவனது பின்னணியில் உள்ள மற்றவர்களை பிடிப்பதற்காக தனிப்படையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர். அமீர் ஹர்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் 5 குழுக்களை சேர்ந்த 10 பேர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளான். அவர்கள் தலா 2 பேர் வீதம் தனித்தனியாக பிரிந்து கைவரிசை காட்டியுள்ளனர். அமீரும் அவனது கூட்டாளியும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் சுற்றிவந்து எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் செலுத்தும் வசதி உள்ள சி.டி.எம். இயந்திரங்கள் இருக்கும் ஏ.டி.எம். மையங்களை தேர்வு செய்ததாகவும், சி.டி.எம். இயந்திரத்தின் பணம் வரும் இடத்தில் உள்ள ஷட்டரை 20 வினாடிகள் பிடித்தும் சென்சாரை மறைத்தும் 100க்கும் மேற்பட்ட தடவைகள் பணம் எடுத்ததாக தெரிவித்துள்ளான். தங்களது கொள்ளை திட்டத்தை பெரும்பாலும் நள்ளிரவு நேரத்தில் செயல்படுத்தியதாக கூறியுள்ள அவன், இரவு 11:30 மணி முதல் 12:30 மணிக்குள்ளாக கொள்ளையை அரங்கேற்றிவிட்டு தப்பியதாக தெரிவித்துள்ளான். அவனிடம் நான்கரை லட்சம் ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர். அமீர் ஹர்ஷை டெல்லி வழியாக சென்னை அழைத்து வந்து விசாரணையை தொடர போலீசார் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்