புதுச்சேரி: புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.புதுவையில் தற்போதைய கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் சின்னத்திரைக்கான படப்பிடிப்பை 100 பேரைக் கொண்டு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும்.