சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்த்திய உரைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அனைவருக்குமான அரசு இதுவெனக் காட்டும் ஆளுநர் உரை புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதமாக ஆளுநர் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.