சென்னை பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பாஜக பிரமுகர் அடைக்கலம்!: போலீசார் விசாரணையில் ஒப்புதல்..!! Jun 21, 2021 பாஜக பிராக்கூர் மணிகண்டன் முன்னாள் அமைச்சர் பாலியல் புகார்கள் சென்னை: திரைப்பட நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு தென்மாவட்ட பாஜக பிரமுகர் அடைக்கலம் கொடுத்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் துணை நடிகை அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது மணிகண்டன் தென்மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரது உதவியாளர், ஓட்டுநர், பாதுகாவலர் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கூறிய மணிகண்டன், தலைமறைவானார். அவர் தாக்கல் செய்த மனுவை கடந்த 16ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பெங்களூருவில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், அவர் தென்மாவட்டத்தை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகர் ஒருவரது வீட்டில் 10 நாட்கள் தங்கி இருந்தாக தெரிவித்துள்ளார். அவரது உதவியுடன் பெங்களூருவுக்கு தப்பி சென்றதாக மணிகண்டன் கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டனுக்கு அடைக்கலம் அளித்த பாஜக முக்கிய பிரமுகர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்