வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே முள்ளியாறு மாணங்கொண்டான் ஆற்றில் உள்ள வெங்காய தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் வாய்மேடு பிராந்தியங்கரை வரை முள்ளியாற்று பாசன பகுதி ஆகும் இப்பகுதிகளில் 525 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர் மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்கு 18வது முறையாக ஜூன் 12ம் தேதி திறப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்நிலையில் இப்போது டிராக்டர் வைத்து உழுதல், நாட்டு விடுதல், நேரடி நெல் விதைப்பு போன்ற பணிகள் நடைபெறுகிறது.