கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையில், ஆரம்பாக்கம் மற்றும் சுண்ணாம்புகுளம் பகுதிக்கு இடையே பழவேற்காடு ஏரி பகுதியில் இருக்கம் தீவு உள்ளது. இங்கு தமிழ் பேசும் 1000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மாணவர்கள் ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றின் 2 அலைகளிலும் இத்தீவில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படவில்லை. அவர்கள் நாள்தோறும் மீன் உண்பதாலும், ஊரைவிட்டு யாரும் வெளியே வருவதில்லை என்பதாலும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது..