சென்னை: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்தியநாராயணன் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாசன் தாக்கல் செய் மனு: தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்தியநாராயணன். இவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி, சுமார் 1 கோடி ரூபாய் செலவு செய்து முறைகேடு செய்துள்ளார். 2018-19ம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் ரூ.30 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளார்.