சென்னை: மலைவாழ் மக்களின் சேவைக்காக 10 புதிய அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் 108 இலவச அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டிற்காக கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 2 மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசரகால ஊர்திகள் மற்றும் மலைவாழ் மக்களின் சேவைக்காக, மலைப் பகுதிகளில் செல்லும் வகையில் 8 அவசரகால ஊர்திகள், என மொத்தம் 1 கோடியே 76 லட்சத்து 87 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்பிலான 10 அவசரகால ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, அதில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.