முக்கிய செய்தி உலகம் கொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர் Jun 16, 2021 கொலம்பியா கொலம்பியா: கொலம்பியா நாட்டில் ராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 36 பேர் படுகாயமடைந்தனர். கொலம்பியா நாட்டில் அரசுப்படையினருக்கும், தேசிய விடுதலை ராணுவம் என்ற இடதுசாரி போராளிகள் அமைப்பிற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் குகுடா நகரில் உள்ள ராணுவ தளத்திற்குள் இன்று கார் ஒன்று நுழைந்தது. ராணுவ உடையணிந்த 2 பேர் அந்த காரை ராணுவ தளத்திற்குள் நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.ராணுவ தளத்திற்குள் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களில் அந்த காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்துச்சிதறியது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த அனைவரும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர். ராணுவ தளம் மீது இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் அமைப்பினரே இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக கொலம்பியா பாதுகாப்புத்துறை மந்திரி டிகோ மலோனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை.! பொதுமக்கள் அதிர்ச்சி
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம்
2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது: ராகுல், ஓம்பிர்லா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்
வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு