சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சிமென்ட், எம்.சான்ட், கம்பி, ஜல்லி, செங்கல், மரக்கட்டை உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலை 20% உயர்வால் கட்டுமானத்துறையே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுதவிர பெயின்ட், எலக்ட்ரானிக் ஹார்ட்வேர் பொருட்கள் விலை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வின் காரணமாக கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்து, வாடிக்கையாளருக்கு ஒப்புக்கொண்ட விலையில் வீடுகளைக் கட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.