சென்னை: தமிழக மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் 2020-2021ம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 7.5 ச தவீதம் இடம் ஒதுக்கப்பட்டது. அதே போல பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன் வளம், சட்டம் போன்ற தொழில் கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக்கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளது.