சென்னை: தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் குறைந்த அளவில் இருப்பதை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.