சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை!: வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டி..!! Jun 14, 2021 வந்தலூர் உயிரியல் பூங்கா வனவிலங்கு அமைச்சர் ராமச்சந்திரன் சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தவிர வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை என்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 3ம் தேதி நீலா என்கிற பெண் சிங்கம் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து, 10 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பாதித்த சிங்கங்கள், சிங்க உலாவிடம் மற்றும் வனவிலங்குகளின் உறைவிடங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், புலிகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றார். மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரவியதாக தகவல் இல்லை என்று அவர் கூறினார். முதுமலை டாப்சிலிப் யானைகள் முகாம்களிலும் யானைகளுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க விலங்கு பராமரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் பராமரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடை கட்டாயம் என்றும் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் குறிப்பிட்டார்.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்