சென்னை அதிமுக ஆட்சியில் தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!: அமைச்சர் மா.சுப்ரமணியன்..!! Jun 14, 2021 அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை: அதிமுக ஆட்சியின் போது பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் 4 கோடி ரூபாய் வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மா.சுப்ரமணியன், 2008ம் ஆண்டு முதல் நடமாடும் மருத்துவமனைகளில் 200 ஊர்தி ஓட்டுநர்கள் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் பார்த்தசாரதி உள்ளிட்ட மூன்று பேர் சுமார் 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது குறித்த புகார் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்