சிறுமிகளிடம் பாலியல் மீறல்.. ஆபாச வார்த்தைகள்.. யூடியூப் கேமர் மதன் போலீசில் ஆஜராக கெடு

சென்னை : யூ - டியூபில் மிகவும் பிரபலமான மதன் நேரில் ஆஜராகுமாறு புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் ப்ரீ பையர் போன்ற வேறு பெயர்களில் இன்னும் அத்தகைய விளையாட்டுகள் இணையதளத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. பப்ஜி விளையாட்டு எப்படி விளையாடினாள் வெற்றி பெறுவது என்பது பற்றி ட்ரிக்ஸ் சொல்லி தரும் சேனலாக தொடங்கப்பட்ட மதன் ட்ரிக்ஸ் சேனல் என்ற யூ டியூப் சேனல் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் போக போக ஆபாச பேச்சும் பெண்களை இழிவுப்படுத்தும் பேச்சுகளும் இந்த சேனலில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆபாச பேச்சுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஆபாச பேச்சுகளுக்காகவே மதன் 18+  என்ற மற்றொரு யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டது. அதோடு தனது விளையாட்டு திறன் மற்றும் வாய் சாமர்த்தியதன் மூலம் சிறுவர்களை கவர்ந்த மதனுக்கு சூப்பர் சாட் மூலம் பல சிறுவர்கள் பணம் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மதன் மீது சிறுவர்களிடம் பணம் பறிப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது போன்ற குற்றத்திற்காக சைபர் கிராமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதே போன்று அவரது யூடியூப் சேனலையும் முடக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: