சென்னை தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது..!! Jun 14, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கிறது. இன்று காலை சென்னை அசோக்நகரில் இருக்கக்கூடிய அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுடைய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம் என அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகளை தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பல்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகளில் 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 9ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்