3 கோயில்களுக்கு இணை ஆணையர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: 3 கோயில்களுக்கு இணை ஆணையர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு:  திருப்பூர் மண்டல இணை ஆணையர் நடராஜன் பழனி முருகன் கோயில் இணை ஆணையர் ஆகவும், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் ஆகவும், திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சுசீந்திரம் கோயில் இணை ஆணையர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: