2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை எதிர்க்க வியூகம் தீவிரம்

மும்பை: எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் பணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிசோர் சரத் பவாரை சந்தித்து பேசியது பற்றி குறிப்பிட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிசோரை நியமிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக நவாப் மாலிக் தெரிவித்தார். மும்பையில் சரத் பவாரை பிரஷாந்த் கிசோர் சந்தித்து பேசியது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பிரஷாந்த் கிசோர் யோசனையை சரத் பவார் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: