தமிழகத்தில் 29,243 பேர் டிஸ்சார்ஜ் ஒரே நாளில் 15,759 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 378 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நேற்று 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  29,243 பேர் வீடுதிரும்பியுள்ளனர். மேலும்  சிகிச்சை பலனின்றி 378 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,82,586 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 15,759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 2056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 29,243 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 378 பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்தம் 28,906 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: