முக்கிய செய்தி அரசியல் ஜூன் 14-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது; அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு Jun 10, 2021 எல். பா அதிவேக தலைமைக் கழகம் சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. எம்எல்ஏ-க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21-ம் தேதி கூடவுள்ள நிலையில்,எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா போன்றோர் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம்: ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்
சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை
ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரம்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சர் மீது அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகி அளித்த புகாரில் கோர்ட் உத்தரவு
தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களில் இருக்கும் 42 நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் இருப்பு: பாசனம் வசதி, குடிநீர் தேவை, மின் உற்பத்திக்கு கடும் பாதிப்பு; 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் சரிந்ததால் கவலை
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.. விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம் : உச்சநீதிமன்றம்
2 கட்ட வாக்கு சதவீதத்தை உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும் :சீதாராம் யெச்சூரி வேண்டுகோள்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
கர்நாடகவில் பெரும் புயலை கிளப்பிய விவகாரம் : பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம்!!
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து