சென்னை: மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: ஓட்டேரி மயான பூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் 24ம் தேதி வரை ஓட்டேரி மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது. இன்று முதல் 24ம் தேதி வரை வேலங்காடு அல்லது அரும்பாக்கம் மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.