முக்கிய செய்தி சென்னை ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்; சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது: ஜெயக்குமார் பேட்டி Jun 09, 2021 அஇஅதிமுக சசிகலா ஜெயக்குமார் சென்னை: ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் என முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். வருகிற 14ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதிகோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆளுங்கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வது அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்க வேண்டும் என்று கூறினார். சசிகலா வெளியிட்ட ஆடியோ குறித்து கேட்டபோது, சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்நிலை தொடரும் என்று கூறினார். மேலும் அதிமுக பொதுச் செயலாளரை புதிதாக தேர்வுசெய்ய மாட்டோம் என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படும் என கூறினார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரையும் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 3 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் என்று கூறினார்.
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்