முக்கிய செய்தி சென்னை கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 12-ம் தேதி திருவாரூர் சென்று ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் Jun 08, 2021 திருவாரூர் ஸ்டாலின் சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் 12-ம் தேதி திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சேலம், கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் காணொலி காட்சி வாயிலாகவும் மாவட்ட ஆட்சியர்களுடன் அவ்வப்போது கொரோனா தடுப்புப்பணிகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து அவர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு..!!
தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மஞ்சள் எச்சரிக்கை..! தமிழ்நாட்டில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்டவை கொள்ளை
தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு: 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் கலக்கம்
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!