முக்கிய செய்தி தமிழகம் புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறப்பு; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு Jun 08, 2021 நாவச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுக்கடைகளில் மது அருந்தவும், பார்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு கடற்கரைகள், வழிகாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளையும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் 50% பணியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுநுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கவும் கூறப்பட்டுள்ளது.
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்