சென்னை: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையை இந்தியாவிலேயே சிறந்த துறையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா 2வது அலை பரவி வரும் சூழலில், மக்களின் வசதிக்காக சில தளர்வுகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நமது இணையதளத்தில் இ-பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 5 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான பதிவுகள் மட்டுமே வழக்கமாக பதிவாகும்.